Wednesday, July 30, 2014

தினம் ஒரு அரசியலமைப்பு சரத்து 2

சரத்து 80 : மாநிலங்களவை யின் கட்டமைப்பு

80(1) : மாநிலங்கள் அவை,                                                                           தற்போது
              
       (அ) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின்
               பிரதிநிதிகள் (அதிகபட்சமாக)                                           238        229 + 4
              
        (ஆ) குடியரசு தலைவரால் பரிந்துரைக்கப்படும் 
                  உறுப்பினர்கள்                                                                        12          12
                                                                                     
                                                       மொத்தம் (அதிகபட்சமாக)          250         245

80(2) : மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான மாநிலங்களவை                              இடஒதுக்கீடு: 

               மாநில மற்றும்  யூனியன் பிரதேசங்களுக்கான மாநிலங்களவை இடஒதுக்கீடு 4ம் அட்டவணையில் அடங்கியுள்ள வகைமுறைகளுக்கு உட்பட்டு இருத்தல் வேண்டும்.

 FOURTH SCHEDULE [Articles 4(1) and 80(2) 

Allocation of seats in the Council of States  

              For each State or Union territory specified in the first column of the following table, there shall be allotted the number of seats specified in the second column thereof opposite to that State or that Union territory, as the case may be. 

1.      Andhra Pradesh      18  
2.      Assam                     7  
3.      Bihar                      22  
4.      Goa                         1 
5.      Gujarat                   11  
6.      Haryana                   5  
7.      Kerala                      9  
8.      Madhya Pradesh     16  
9.      Tamil Nadu             18  
10.    Maharashtra            19  
11.    Karnataka               12  
12.    Orissa                    10  
13.    Punjab                     7  
14.    Rajasthan               10  
15.    Uttar Pradesh          34  
16.    West Bengal           16  
17.    Jammu and Kashmir  4  
18.    Nagaland                  1  
19.    Himachal Pradesh     3  
20.    Manipur                    1  
21.    Tripura                      1  
22.    Meghalaya                1  
23.    Sikkim                      1  
24.    Mizoram                   1  
25.    Arunachal Pradesh    1  
26.    Delhi                        3  
27.    Pondicherry.             1  
***
***
Total                              233

80(3) : பரிந்துரைக்கப்படும் உறுப்பினர்கள் (Nominating Members) :
             
              குடியரசுத் தலைவரால் 12 உறுப்பினர்கள் பரிந்துரை செய்யப்படுகிறார்கள். அந்த 12 உறுப்பினர்களும் கீழ்காணும் துறைகளில் சிறந்த அறிவுடையவராகவோ அல்லது செயல்முறை அனுபவமோ (Special Knowledge or Practical Experience) உடையவராக இருத்தல் வேண்டும்.

               (அ) கலை (Art)
               (ஆ) இலக்கியம் (literature)
               (இ) அறிவியல் (Science)
               ( ஈ) சமூகசேவை (Social Work)

               மேற்கண்ட துறைகளில் சிறந்த அறிஞர்களின் பிரதிநிதித்துவத்தை குடியரசுத் தலைவா பரிந்துரை செய்கிறார்.  மாறாக அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பரிந்துரைக்கப்படும் உறுப்பினர்கள் இல்லை.

80(4) : மாநிலங்களின் பிரதிநிதித்துவம் (Representation of States) :

               மாநிலங்கள் அவை யில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தின் பிரதிநிதிகள் அந்த மாநிலச் சட்டமன்றப் பேரைவயின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினாகளால் Proportional Representation by means of Single Transferable Vote முறையினால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

              மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்கான மாநிலங்களவை இடஒதுக்கீடானது செய்யப்படுகிறது. 
அதிகபட்சமாக    உத்திரபிரதேசம்    ............   31 உறுப்பினர்கள் 
குறைந்தபட்சமாக திரிபுரா                 .............     1 உறுப்பினர்

ஆனால் இதற்கு நேர்மாறாக அமெரிக்காவில் 
              மேலவை (Senate) ஆனது மக்கள் தொகையை கணக்கில் கொள்ளாது 50 மாநிலங்களுக்கும் 2 உறுப்பினர்கள் வீதம் 100 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

80(5) : யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதித்துவம் (Representation of Union Territories) :

               மாநிலங்களவையில் யூனியன் பிரதிநிதிகள் நாடாளுமன்ற சட்டத்தின் வாயிலாக வகுத்துரைக்கிற முறையில் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்.

தற்போதைய நடைமுறை : இந்த காரணத்திற்காக (யூ.பி. உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க) அமைக்கப்படுகின்ற electoral college வாயிலாக மறைமுகத் தேர்தல் மூலம்  Proportional Representation by means of Single Transferable Vote வாயிலாக தோந்தெடுக்கப்படுகின்றனர்.
                 7 யூனியன் பிரதேசங்களில் டெல்லி மற்றும் புதுச்சேரி மட்டுமே இராஜயசபாவில் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளன. ஏனெனில் மற்ற யூனியன் பிரதேசங்களில் மக்கள் தொகையானது கணிசமான அளவில் இல்லாததே இதற்கு காரணமாகும்.

மாநிலங்களுக்கான இடஒதுக்கீடு முறைமைகள் மற்றும் மாநிலங்களுக்குள் தொகுதி மறுசீரமைப்பு முறைமைகள் பற்றி சரத்து 82ல் காணலாம்.

                                 
                     

Tuesday, July 29, 2014

தினம் ஒரு அரசியலமைப்பு சரத்து 1

பாராளுமன்றம் 

ஜனநாயக நாட்டின் மிக உயர்ந்த அங்கமாக விளங்கும் பாராளுமன்றம் நாட்டு மக்களின் நலன்காக்கும் சட்டத்தினை இயற்றும் பணி செய்கிறது.  அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி   சரத்து 79 - 122 வரை நாடாளுமன்றத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை விளக்குகின்றன.

சரத்து 79 : நாடாளுமன்றத்தின் அமைப்பு (Constitution of Parliment )

சரத்து 79 ஆனது இந்திய ஒன்றியத்திற்கு நாடாளுமன்றம் ஒன்று இருத்தல் வேண்டும் என்று கூறுகிறது.

நாடாளுமன்றம் கீழ்கண்டவற்றை உள்ளடக்கியது

                           1. குடியரசுத் தலைவர் (President)
                           2. மக்களவை ( லோக்சபா ) 
                           3. மாநிலங்களவை ( ராஜ்யசபா ) என்றும் கூறுகிறது.

1954 ஆம் ஆண்டு 'மக்களவை' மற்றும் 'மாநிலங்களவை' யின் ஹிந்தி வடிவமான முறையே 'லோக்சபா' மற்றும் 'இராஜ்யசபா' ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நாடாளுமன்றம் குடியரசுத் தலைவரை உள்ளடக்கியது எனினும், அவர் நாடாளுமன்றத்தின் அவைகளில் உறுப்பினருமல்ல, நாடாளுமன்ற கூட்டஅமர்வுகளில் அமர மாட்டார்.  கூட்டத்தொடரின் போது அவையின் தொடக்கவுரை ஆற்றுவதோடு சரி ( சரத்து 87).

இருப்பினும் அவர் நாடாளுமன்றத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருக்கிறார் ஏனென்றால்,
                 நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டஒரு மசோதாவனது (bill) குடியரசுத் தலைவரின் கையொப்பமில்லாமல் அவை சட்டமாகா. சட்ட (Act) அந்தஸ்தை கொடுக்கும் அதிகாரம் அவரிடமே உள்ளது. 

மேலும் அவர் ஒரு சில நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கு கொள்பவராகவும் இருக்கிறார்.
              .......சரத்து 85ன் படி நாடாளுமன்ற அவைகளை அல்லது ஏதேனும் ஒரு அவையை கூட்டவும் (Summon), அல்லது கலைக்காது தள்ளிவைக்கவும் (Prorogue), மக்களைவயை கலைக்கவும் (Dissolve) அதிகாரம் பெற்றுள்ளார். 
             ........சரத்து 86ன் படி நாடாளுமன்ற ஈரவைகளில்  ஏதேனுமொன்றிலோ அல்லது கூட்டு அமர்வின் போதோ பேருரை (Address) நிகழ்த்த அவருக்கு அதிகாரம் உண்டு. 
            ........சரத்து 123ன் படி இரு அவைகளுமோ அல்லது ஏதேனும் ஒரு அவையின் கூட்டத்தொடர் அமர்வோ (Session) இல்லாத நேரத்தில் குடியரசுத் தலைவருக்கு அவசரச்சட்டம் (Ordinance) பிறப்பிக்க அதிகாரமுண்டு.

இதேபோல் இன்னும் பல.......
            இத்தகைய கரணங்களால் குடியரசுத் தலைவரை நாடாளுமன்றத்தின் ஒரு அங்கமாகவே (Part) அரசியலமைப்பு எடுத்துரைக்கிறது.

இதேபோல் இங்கிலாந்தில்,
நாடாளுமன்றமானது,
                                                 1. அரசர் (King or Queen)
                                                 2. மேலவை (House of Lords)
                                                 3. கீழவை (House of Commons)  உள்ளடக்கியது.

நாடாளுமன்ற அரசாங்கத்தில் ...... நிர்வாக (Executive)  மற்றும் சட்டமியற்றும்         (Parlimentary Government)                              (Legislature) உறுப்புகள்                                                                                                                          ஒன்றையொன்று சார்ந்து உள்ளன.

அமெரிக்காவில்,
       
                             1. மேலவை (Senate)
                             2. கீழவை (House of Representative) ஆகியவற்றை உள்ளடக்கியது.

ஜனாதிபதி முறை அரசாங்கத்தில் ....... நிர்வாக மற்றும் சட்டமியற்றும்                   (Presidential Government)                                        உறுப்புகள் தனித்தனியானவை.

அமெரிக்க ஜனாதிபதி நிர்வாகத்துறையின் தலைவராக உள்ளார்.





























                               



Friday, February 14, 2014

வேண்டும் இணைப்பு

  கடந்த மாதம் மத்திய அமைச்சரவை கென் - பெட்வா நதிநீர் இணைப்புத் திட்டத்தை தாற்காலிகமாக ஒத்திவைக்கத் தீர்மானித்தது அரசியல் சூழல் காரணமாக பரவலாக மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. இந்த திட்டம் மட்டுமல்லாமல், மத்திய அரசின் பரிசீலனையில் இருக்கும் ஏனைய 30 நதிநீர் இணைப்புத் திட்டங்களும், இனிமேல் அடுத்து பதவி ஏற்கும் அரசின் முடிவுக்குக் காத்திருந்தாக வேண்டும்.
  கென், பெட்வா ஆகிய இரு நதிகளுமே விந்திய மலையில் உருவாகி, யமுனையில் கலக்கும் அதன் துணை நதிகள். மத்தியப் பிரதேச மாநிலம் ஹோஷங்காபாதுக்கு வடக்கில் உருவாகி, வட கிழக்காகப் பாய்ந்து, மால்வா பீடபூமி வழியாக உத்தரப்பிரதேச மாநிலம் ஹமீர்பூர் அருகில் யமுனையில் கலக்கிறது பெட்வா நதி. கென் நதி மத்தியப் பிரதேசம் ஜபல்பூர் அருகில் உருவாகி உத்தரப் பிரதேசம் பதேபூர் அருகில் யமுனையில் கலக்கிறது.
  இந்த நதிகளை இணைக்கும் திட்டத்திற்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்து, மத்தியப்பிரதேசம், உத்தரப் பிரதேசம், மத்திய அரசு மூன்றும் இணைந்து ஒரு முத்தரப்பு ஒப்பந்தமும் கையெழுத்தாகி இருந்தது. இந்த நிலையில்தான், நதிநீர் இணைப்பால் உயிரின வாழ்க்கைச் சூழலியலில் பாதிப்பு ஏற்படும் என்று ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்ததால், மத்திய அமைச்சரவையால் நதிநீர் இணைப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
  கங்கையையும் காவேரியையும் இணைக்கும் கார்லண்ட் கால்வாய் திட்டம் 1972இல் முன்வைக்கப்பட்டது. தின்ஷா தஸ்தூர் என்கிற பொறியாளரால் தயாரிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு அப்போது கோரப்பட்ட நிதி ரூ.15,000 கோடி. இதன் மூலம் இந்தியாவின் சில பாகங்களில் காணப்படும் வறட்சியையும், அவ்வப்போது ஏற்படும் வெள்ளச் சேதத்தையும் எதிர்கொள்ள முடியும் என்பதால் இந்தத் திட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
  இமாலய நதிநீர் கால்வாய், தக்காண பீடபூமிக் கால்வாய் என்ற இரண்டு ராட்சதக் கால்வாய்கள்தான் இந்தத் திட்டத்தின் அடிப்படை. இமயமலையின் அடிவாரத்தில் ராவி நதிக் கரையிலிருந்து சிட்டகாங் வரையில் 300 மீட்டர் அகலமுள்ள ராட்சதக் கால்வாய் சுமார் 3,800 கி.மீ தூரத்துக்கு வெட்டுவது என்பது கார்லண்ட் கால்வாய் திட்டத்தின் முதல் பகுதி. இதன் மூலம் இமாலய நதிகளில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளச் சேதத்தை எதிர்கொள்வது குறிக்கோள்.
  தக்காண பீடபூமிக் கால்வாய் சம்பல் நதியில் தொடங்கி கன்னியாகுமரியில் முடிவடையும். ஒரு பெரிய மாலைபோல அமையும் இந்தக் கால்வாய் விந்திய மலைக்குக் கீழேயுள்ள மழை நீரை எதிர்நோக்கும் தென்னிந்திய நதிகள் அனைத்தையும் இணைப்பதாக அமையும். இமாலய நதிநீர் கால்வாய் இரண்டு இடங்களில் பெரிய குழாய்கள் மூலம் தக்காணப் பீடபூமிக் கால்வாயுடன் இணைக்கப்படும்.
  இமாலய நதிநீர் கால்வாய் கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் மேலேயும், தக்காணப் பீடபூமிக் கால்வாய் 500 மீட்டர் உயரத்திலும் இருப்பதால், இயற்கையாகவே தண்ணீர் மேலிருந்து கீழ்நோக்கிப் பாயும். இந்தக் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்பட்டால், இந்தியாவில் விவசாயம் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்கொள்ளும்.
  1972இல் முன்வைக்கப்பட்ட கார்லண்ட் கால்வாய் திட்டத்தின் தொடர்ச்சியாக 1982இல் தேசிய நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் ஆய்வுப்படி 14 இமயமலை சார்ந்த நதிகளையும், 16 தக்காண பீடபூமி நதிகளையும் முதற்கட்டமாக இணைக்கும் முயற்சியில் ஈடுபடுவது என்று அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதன்பிறகு முனைப்பும் முயற்சியும் எடுக்கவில்லை.
  இந்தியாவின் ஒற்றுமைக்கும் மாநிலங்களுக்கிடையேயான உறவுகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது நதிநீர் பிரச்னைதான். அதுமட்டுமல்லாமல், இந்திய விவசாயிகள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்னையும் பாசனத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் இருப்பதுதான். ஆண்டுதோறும் இந்திய நதிகளிலிருந்து கடலில் போய் கலக்கும் தண்ணிரில் 20 விழுக்காடு இருந்தாலே போதும் இந்தியா மிகச் செழிப்பான நாடாக மாறிவிடும். அதனால் இந்தியாவின் அடிப்படை பிரச்னைக்கு நதிநீர் இணைப்பே தீர்வாக அமையும்.
  சுற்றுச்சூழல் பாதிப்பு, உயிரின வாழ்வியல் பாதிப்பு என்றெல்லாம் காரணம் கூறி நதிநீர் இணைப்பை எதிர்ப்பவர்கள், மணல் மற்றும் கனிமவளக் கொள்ளைக்கும் விளைநிலங்கள் குறைப்பிற்கும் வனப்பரப்பு அழிப்பிற்கும் உடந்தையாக இருக்கிறார்கள் என்பதுதான் நகைமுரண்.   இயற்கை அன்னையை எல்லா விதத்திலும் சீண்டி விளையாடுபவர்கள், நதிநீர் இணைப்பு பிரச்னையில் மட்டும் உத்தமர் வேடம் போடுகிறார்கள் என்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. அடுத்து அமையும் ஆட்சியிலாவது நதிநீர் இணைப்பு பற்றிய மறு சிந்தனை அவசியம்.
                                                                நன்றி : தினமணி
  இயற்கையன்னையின் வடக்கு நதிநீர்வளத்தை தெற்கு நதிகளோடு இணைப்பதன் மூலமே தென்னிந்திய விவசாய வாழ்வாதத்திற்கு ஒரு தீர்வாகவும் தென்னிந்திய மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பங்கீட்டில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாகவும் அமையும் ஏனெனில் தமிழ்நாட்டில் பருவமழை பொய்த்து வருகிறது விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறி வருகின்றன. கால்நடை வளர்ப்பு குறைந்து வருகிறது விவசாயி தன் வாழ்வாதாரத்தை விட்டுச்செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான். இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதில் சில அடிப்படைப் பிரச்சனைகள் இருக்கலாம் ஆனால் அதை மேற்கொள்ளும் வகையில் பொறியாளர்களும் திட்டம் தீட்டூம் வல்லுநர்களும் தொழில்நுட்ப வசதிகளும் நம்மிடம் இல்லாமல் இல்லை. வாக்கு வங்கிளுக்காக மட்டுமே சட்டமியற்றும் நமது அரசியல்வாதிகள் இந்த தொலைநோக்குத் திட்டத்தை செயல்படுத்துவார்களா என்பதும் சந்தேகமே.
                                                                  .......வெங்கடேஷ்                                     


Thursday, October 24, 2013

படித்ததில் பிடித்தது

பால் மாற்றம்

வறுமை
பொறுமைகாத்து
வாழும்
வறண்டுபோன
மண்ணிலிருந்து.......

மகப் பேறுபெற......

அருகே உள்ள
அரசு மருத்துவமனையில்
அடகாத்துக்
கொண்டிருக்கும்
குருவம்மா
மனதில்
மூன்று கேள்விகள்

ஒன்று:
நடக்கப்போவது.....
கத்திக்கொண்டு
நடக்கும்
சுகப்பிரவசவமா
அல்லது
கத்தி கொண்டு
நடக்கும்
ரகப்பிரசவமா

இரண்டு:
பிறக்கப்போவது
ஆண்பாலா
பெண்பாலா

மூன்று:
கொடுக்கப்போவது
தாய்ப்பாலா
கள்ளிப்பாலா.........

       இயக்குநர் பரதன்

Friday, October 18, 2013

இராசாயணத்துளிகள்


cd; thridapy;
vd;idNa ehd; ,of;fpNwd;!..
cd; ];ghprj;jpy;
vd; tho;ehspy;
xt;nthU epkplKk; fiue;Jnfhz;bUf;fpwJ!..
cd; tPhpak;
vd; fz;fspNy fpwf;fj;ij Vw;gLj;jp,
vd; %is tiu, euk;G euk;gha; gha;e;J nry;fpwJ..
,Ue;jhYk;,
vd; cly; caph; K*tijAk;;
cdf;Nf ehd; mw;gzpf;fpNwd;

,urhazNk!!!!!!!!!!!

               வெங;கடேஷ்
          இராசாயணப் பொறியாளர;

Sunday, September 22, 2013